அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

கோளறு படிகம்

ஏறாத பரிசல் பற்றிக்கூட எச்சில் பஸ்-சீட்டுக்கவி நாலெழுதி,
சிவப்புச் சி.ரி.பிச் சீற்றுக்கடியிலும் தொலைத்திருப்பேன்
-சில்லறை மிச்சம் தராச் சீமான் சின ஞாபகத்தில்.

காணா வெண் அன்னத்தின் கிடையாக் கூர்க்கன்னம் கூறாய்க்கிழித்தும்
நீர் போம் வழி, பால் போம் வழி -நேரெது / குறுக்கெது- சொன்னதும்
-சின்ன ஞாபகம்.

தோன்றாத் திரிசங்கின் விண்தோட்டத்திற் தோன்று அவச்சந்தடிப்போதெல்லாம்
தலைகீழாய் அந்தரித்துத் தூங்கிச் சஞ்சரித்தேன் எனும் பொய்ச்சாதிப்பும் என் கூற்றே;
வேண்டின், கூற்றுவன் கணக்கன் குப்தன் நாட்குறிப்பு வைக்கட்டும்
- இன்று வரவு ஒன்று.

உப்பிய கறிமிளகாய் ஒத்த கண்ணென்று உள்ளதைச் சொன்னால்,
கவிஞர் ஒப்பனை மரபுக்கு ஒப்பில்லாப் பிசகோவென்றெண்ணித்
தமிழ் கேட்டவர் கற்பனை ஒட்டத் துல்லியமாய்
வாளைமீன் வலித்த வண்ணத்துப்பூச்சிச்

சிமிட்டலென்றோட்டினேன் சிறுகதை -ஒரு முழம்.
மச்சவாடை காணா மரக்கறிக்காளைகூட, காய்வாழை எண்ணி,
"வாழ்க கற்பனை! வளர்க கவிதை" என்றானோ, நானறியேன்.

"அற்றதை உற்றதாய் அவரவ ரிஷ்டத்துக் குரைத்தலன்றி
இற்றை யானறியே னேதும் பொல்லாப்பு; நித்திய மித்திரா,
ஓ! என் இஷ்ட தெய்வமே! தில்லைக் கச்சியேகம்பனே!"


எப்படியோ வாகட்டு மி·தெல்லா மென்றொதுங்கிப் போனாலும் புறம்,
இருப்பின் நிலை ஈன்ற இற்றைக்கவலை, ஏறியகடன், எதிர்க்கருத்து
நரம்பெக்கிக் கத்திச் சொல்கையிலும், கேள் கவனத்தவறாய்,
தம் சொந்தத்தவனத்துச் சஞ்சரிப்பாய், செவிட்டுத்தொனிப்பில்,
"எட மூடா! மூதேவி! எந்த நடைமுறைக்கு மசாத்தியம் இது"
எனு மொற்றைப் பரிகாரத்துச் சுவாத்தியர் பரிவாரம்மட்டும்
சுணங்காமற் சுற்றிப்போகமுடியவில்லை சுள்ளிக்கால்,
- இடமும் வலமும் எதிர்த்தவெத்திசையும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home