அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

சேதப்படுதல்

நானுந்தான் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்
நாட்கணக்காக.

"எப்படியடா வாழ்க்கை?" என,
"சேதமில்லை" என்று
சன்னமாய்ச் சொல்பவன்,
நாரியும் திருப்பாமலே
நன்றாய்த் தூங்குகிறான்
தினமும்.

யாரெல்லாம் நாளறியாப்போதிற்
புதைத்த நாட்பட்டகேள்விகளைப்
போகவரக் கிண்டிக் கோர்த்து
தெருக் கிலுக்கித்திரிபவன்
இராத்திரிப்போதெல்லாம்
தூக்கமில்லாத் துக்கத்துடன்
பார்த்துக்கொண்டிருக்கிறான்,
தூங்கிக்கொண்டிருப்பவனை.

26, பெப்ருவரி, '02 செவ். 02:44 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter