அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

நகர்

வசித்த எல்லா நகர்களும் குறைந்ததொரு
கொடுங்கோலனைப் பிரசவித்ததானவை.
நடுமத்தியானத்திலே எருமைத்தோல் முதுகைக்
காட்டிக்கொண்டு பிறந்து தொலைக்கும்
குறுங்கிய கொடுங்கோலர்களுக்கும் அவை பூமி;
பின்னிரவின் பூட்டிய கதைவைத் துளைத்துக்
குத்துக்குருதி கசியாமல் ஊசி ஊடுறுத்துக் கழியும்
துளிநாசிநுனிக் கடுங்கோலர்களும் அடங்கும்
எல்லா நகர்களிலும் ஆனதெம் எல்லோரினதும் வாசம்.
தோலும் ஊசியும் பறையும் துளையுமாய்ப்
போன, போகிற பின் முன் பகலிரவுப்போதுகளில்
இந்த நகர் எந்த நகருக்கும் நல்லதில்லை;
சென்ற நகர் இந்த நகருக்குக் கெட்டதில்லை.
முரட்டுத்தோலும் முள்ளூசியும்
ஆவிசோரும் வரை காவித் திரி;
கழி பொழுது; அழி நிலை.

12, மே '02 ஞாயிறு 16:16 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home