வேண்டுதல்
அனைத்து ஆகமத்தும்
ஆங்காங்கே அருளியபடி
ஆகுதல் அர்த்தமானால்......
.......என் ஆண்டவரே,
வேண்டவில்லை
உம்மிடம்,
எனக்கு வேண்டாம்
நரகென்று.
விளைவெனக் கதுவேயானால்,
விழைந்து வேண்டுதலெல்லாம்,
எனக்கு வேண்டப்படாரை,
என்னை வேண்டாரை
வீசியெறியாதீர் என்னோடு...
வேண்டி வைத்துக் கொள்ளும் உம்மோடு;
விநையமாய்க் விழி கண்டு காப்பாற்றும்.
வாழவிடும் என்னை மட்டும்
என் வாழ்காலம் பின்னேனும்
நீர் விதிக்கும் நிர்ணயத்தே.
நிஜத்துக்கும் நன்றி.
'99 ஜூலை 17, சனி
ஆங்காங்கே அருளியபடி
ஆகுதல் அர்த்தமானால்......
.......என் ஆண்டவரே,
வேண்டவில்லை
உம்மிடம்,
எனக்கு வேண்டாம்
நரகென்று.
விளைவெனக் கதுவேயானால்,
விழைந்து வேண்டுதலெல்லாம்,
எனக்கு வேண்டப்படாரை,
என்னை வேண்டாரை
வீசியெறியாதீர் என்னோடு...
வேண்டி வைத்துக் கொள்ளும் உம்மோடு;
விநையமாய்க் விழி கண்டு காப்பாற்றும்.
வாழவிடும் என்னை மட்டும்
என் வாழ்காலம் பின்னேனும்
நீர் விதிக்கும் நிர்ணயத்தே.
நிஜத்துக்கும் நன்றி.
'99 ஜூலை 17, சனி
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home