அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

விதண்டாவாதம்

'எது பற்றியும்
எல்லாம் அறிந்தவன்போல
எப்போதும்
ஏதோ ஒரு கருத்துரைப்பது
என்ன நியாயம்?'
-நிமிறித் துடிக்கும் திமிறற் கேள்வி.

'ஒவ்வொன்று பற்றியும்
ஒன்றும் அறியானுக்கும்கூட
ஒவ்வொரு பொழுதும்
ஒரு கருத்தும் இல்லையெனக் கொள்ளல்
மிகைப்பட்ட அநியாயம்.'
-நிதானமாய் வெளிவரும் அவதானமான பதில்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home