அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

இலக்கியச்சிந்தனை

யாயும் ஞாயும் யாராகியரோ
(என் மகள் எவனையும் நினைத்திருப்பாளோ)

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
(எவனோடாச்சும் ஓடிப்போனாளோ)

யானும் நீயும் எவ்வழி அறிதும்
(எம் சாதி சமயங்கள் ஒத்துவருமோ)

செம்புலப் பெயல் நீர் போல
(செந்நீர் ஒழுகி ஓடினுங்கூட)

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
(வலுச்சண்டையில் அவர்தமைப் பிரித்திடல் குலநீதி)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home