அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சாவு

இளஞ்சவம் நீட்டிக் கிடந்தது.
சுற்றி, இனசனம் புலம்பி இருந்தது.
"போகிற வயதா?" - புழுங்கிய ஒருவர் பொறுக்கி மென்றார் சிறு
பாக்கு.
"எல்லாம் அவன் செயல்; எதுவுமே நம் கையிலில்லை"
- விடை தந்த வேதாந்தி, வேகமாய் அடித்துக் கொன்றார் தன்
காலில் ஒரு பிஞ்சு நுளம்பு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home