அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நாள் வேறு

நிழல்வெளியிற் சமர் நடக்கும்;
குதிரைகளும் போர்ப்பறையும் வெளி எங்கும் எக்களித்து விரவும்
வெறி;
எந்நாட்டான், எவன் அரசன்,
காலாட்படையாள் யார், யானையேறு வீரனெவன்
எல்லாம் தெளிவற்ற பனிமூட்டப்போர்ப்படலம்;
பிடித்த அரசு தாக்குப் பிடிக்கவும்
விட்ட நிலம் மீட்டு எடுக்கவும்
மனவெளியில் இரணம் எழுப்பி,
இருள்வெளியில் நிழல் மிருக மனிதர்
குதித்துக் குதித்துக் குதறி வெட்டுவர்.
வெற்றி தோல்வி தம்மிடை சரி உறுதிக்கோட்டு எல்லையற்று
நேற்றைய வெற்றியே நிகழ்நிழல்நேரத்தோல்வியாய்
இன்றைய தோல்வியே என்றொரு நாள்தன் வெற்றிப்பறைமுழக்கமாய்
நிழல்வெளியிற் சமர் நடக்கும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home