அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

அவர்களுக்கு நன்றி

இன்று வரை அவர்கள் தரும் உயிர்ப் பிச்சை போல்,
இதுவுமொரு இரவற் சொற்றொடர்தான்.
எனினும், இத்தனை வருடங்கள் பின்னும் பொருந்த,
"மரணத்துள் வாழ்வோம் நாம்."
அன்றிலும் இ·தெமக்கு இன்னும் இலகுவாய்,
உரித்த வாழைப்பழத்தைச் சுவைத்து உண்பதுபோல், இப்போது.
"மீண்டுமொரு சிறப்பு விழாவிற் சந்திப்போம்" என்று
சொல்லிக்கொள்வதுபோல்
"மீண்டால், ஓர் இறப்பு உலாவிற் சிந்திப்போம்" என்று
முறுவலித்துக்கொள்கிறோம்.
மரணத்துக்கு நன்றி,
இன்றில் வாழ எமக்குக் கற்றுத் தந்ததற்கு.

-97 04 09

0பின்னூடுகை:

Post a Comment

<< Home