அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

எழுத்தாளனின் தலை எழுத்து

பெண்வண்ணத்தைப் பற்றி எழுதினேன்;
"என்னப்பா? இதுதான் பிழைப்பா?"
-என்றார்கள்.

பெண்காமத்தைப் பற்றிக் கிறுக்கினேன்
"காலுக்கிடையே குனிந்துபார்;
இதை எழுத நீ யார்?"

சிசுவதையைப் பற்றியும் சிலாகித்தேன்;
"ஆஹா! அதைச் சொல்ல வந்தாயோ,
நீ ஆண்பிள்ளை? சீ போடா!"

அவள் கண்ணைப் பற்றியும் கொஞ்சம்;
"பெண்ணென்ன உன் போகசம்பாத்யமா?"
-போச்சு.

இறுதியில் என்னைப் பற்றி எழுதினேன்;
"இழவே, இதை எவன் வாசிப்பான்?
மக்களைப் பற்றி மக்களுக்காக எழுது"

0பின்னூடுகை:

Post a Comment

<< Home