அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

தொலைந்தவனைத் தேடுதல்

எல்லோருக்கும் தெரியும்;
"எல்லோருக்குள்ளும்
ஒரு யாஹ¤
ஒளிந்திருக்கின்றான்"
என்றான்
எஸ்ரா பவுண்ட்.

"எல்லோருக்குள்ளும்
ஒரு கோயாபல்ஸ¤ம்
இருளிருக்கின்றான்"
என்றதையேன்சொல்லவில்லை
என்பதுவோ
எனக்கும் அவனுக்கும்
இன்னொரு மனிதனுக்கும்
மட்டும்தான் தெரியும்.

ஒவ்வொரு சந்திப்பவனிலும்
அடையாளம் தொலைத்த
என் சகமனிதனைத் தேடிக்
கண்டுகொண்டிருக்கின்றேன்
நான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home