அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

"எழுதி எழுதி எனக்குள் ஒரு பகுதியைக் காலியாக்கிவிட்டேன்"*

எழுதி எழுதி எனக்குள்
ஒரு பகுதியைக் காலியாக்கிவிட்டேன்.
எழுதாத மீதியோ
எனது சொந்த உமி.

எழுதாமல் இருந்திருந்தால்,
என்னவாயிருந்திருப்பேன்?
எவனோ ஒருவன்,
என்னைப் பற்றி,
என் உணர்வைப் பற்றி
தன்னதென எடுத்துச் சொல்ல,
எட இழவே!
இதுவென்ன புலம்பலென
ஏற்றுக்கொள்ளாதிருந்திருப்பேனோ?
//=

* ஆறாம்திணை இணையச்சஞ்சிகையிலே விக்கிரமாதித்தனின் செவ்வியிலே
அவராலே சொல்லப்பட்ட தொடர்.
http://www.aaraamthinai.com/nerkaanal/nerkaanal.asp

0பின்னூடுகை:

Post a Comment

<< Home